July 12, 2018

Rainy Day

Cool breeze and crawling clouds,
Announce the arrival of reviving rains.

First droplets of rain.
Pecks the ground gently,
To emanate the Divine earthen smell,
That spreads all around,
To reach our souls.

Sizzling drizzles
Soothes the skin,
Followed by strong thunder
And sparkling lightening,
Splashing further rain,
On the blooming blossoms.

Rain drops, Dew drops 
All over the blades of grasses,
And that’s how the spell bound rain,
Comes to a Screeching Halt.

July 10, 2018

Sunshine

Sunshine Sunshine,
Shining bright all day,
To mark the day and night diligently.
East to West 
The journey continues all day,
To mark the dawn and dusk dutifully.

Sunshine Sunshine
Shining bright all day,
To spread radiance all over,
Until the cloud clutches on a rainy day.

Sunshine Sunshine
Shining bright all day,
To nurture the growing crops,
Longing for your rays.

Sunshine Sunshine
Shining bright all day,
The infinite inventions on the universe,
Can never replace your dense power.

Sunshine Sunshine
Shining bright all day

July 9, 2018

சிறுதானியத்தின் சிறப்பு

தொன்று தொட்டு அனுதினமும் அமுதுபடைக்க
அடுக்களையில் உழன்ற அறுவகை சுறுதானியன்களான
கம்பு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, ராகி - ஆகியவை
மேலை நாட்டு உணவகங்களின் படையெடுப்பால்
இடைக்காலத்தில் சற்று பின்னடைந்திருந்தது - ஆனால்
இன்று மக்கள் சற்று சுதாரித்து
சிந்தித்து செயலாற்ற துவங்கியுள்ளனர்.

இவ்விழிப்புணர்வின் விளைவு,
வீட்டிலிருந்து - விவாஹ மண்டபம் வரை,
சிற்றுண்டி உணவகத்திலிருந்து - நட்சத்திர விடுதி வரை,
சாமை பொங்கல், கம்பங் கூல்,
சிறுதானிய அடை, ராகி ரொட்டி,
கருப்பட்டி காபி, பனங்கல்கண்டு பாயசம்,
பல பதார்த்தங்களாக பிரதிபலிக்கின்றது.

எலும்புக்கு வலிமை தரும் கால்சியம்,
ரத்த சோஹையை சரிசெய்யும் இரும்புச்சத்து,
இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ்,
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து; நல்ல கொலஸ்ட்ரால் மேன்படுத்தும் சத்துக்கள்,
நன்மை பயக்கும் நார்ச்சத்து என அனைத்து சத்துகளின் சங்கமம்.

இத்தானியங்களில் சமைத்த பண்டம் எதுவானாலும்
ஐயம் இட்டு உண்ணுங்கள்;
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்பதை அறிவோம், ஆராதிப்போம்!

July 6, 2018

பனை மரத்தின் பாரம்பரியம்

இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்
என்ற பழமொழி யானைக்கு மட்டும் அல்ல பனைக்கும் பொருந்தும்.
பறந்த பராமரிப்பற்ற அழுக்கு நிலத்தையும்
விதைத்த சில திங்களில்,
கவர்ச்சியான வனப்பகுதிக்கு வல்லமையுடையது.

அழகு மாளிகையின் முகப்பில் அலங்காரமாகவும்;
அடர்ந்த கானகத்தில் கம்பிரமாகவும்;
தொட்டுப்பார்க்கும் உயரத்திலும்;
தொடமுடிய உச்சியைக்கொண்டும்
வீற்றிருக்குமாம் பனை!

இளவேனில், முதுவேனில், கார்,  குளிர், முன்பனி, பின்பனி 
போன்ற ஆறு பருவங்களிலும்,
அதீத பாங்கோ, நிறைந்த நீரோ தேவையில்லை,
இலையுதிர் காலத்தில் துப்புரவின் தொல்லையும்  இல்லை,
சுட்டெரிக்கும் சூரியனை சுகமாக்கி;
வறட்சி தங்கி வானுயர வளர வல்லது.

அடிமரத்திலிருந்து குருத்துவரை 
அணைந்து அங்கங்களும் பயனளிக்கும்.
செதுக்கிய குருதிலிருந்து துளி துளியாக 
வழியும் நீர் பதனியாக மண்பானையில் அடைக்கலம் புகும்.  
அதிகாலையில் தரையிறக்கி,
காய்ச்சிய பதனி ஊட்டச்சத்து மிகுந்த கருப்பட்டியாகும்.
இள நொங்கு கோடையில் இணையில்லா குளிர்பானம்;
அது கணிந்தபின் சுட்டுச்சுவைக்கும் பனம்பழம்,
பனம்பழத்தினின்று பிரியும் நார் நல் கயிராகும்,
பனங்கொட்டையின் பருப்பு  எண்ணெயாகும்,
புவியில் பதியமிட்ட பனங்கொட்டை நார்ச்சத்துள்ள பனங்கிழங்காகும்.
முதிர்ந்த மரம் 
உறுதியான குச்சியாக மாறி;
அடுக்குமாடி கட்டடத்திற்கு  முட்டாகும்.

பழமைவாய்ந்த பனைமரத்தின் பாரம்பரியத்தை போற்றுவோம்!